Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் பக்தர்களுக்கு இன்று ... சிறப்பு அலங்காரத்தில் காரமடை ரங்கநாதர் அருள்பாலிப்பு சிறப்பு அலங்காரத்தில் காரமடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் வருமானம் கடுமையாக பாதிப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் வருமானம் கடுமையாக பாதிப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
10:01

 சபரிமலை: சபரிமலை வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க தந்திரியுடன் ஆலோசிக்கப்படும், என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.

சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மண்டல - மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கிஉள்ளது. மண்டல காலத்தில் தேவசம்போர்டு ஊழியர்கள், போலீசார், பக்தர்கள் என, 423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு கொரோனா உறுதியானது. இதனால், சபரிமலையை தடை செய்யப்பட்ட பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என, கேரள சுகாதார துறை கூறியது. ஆனால், சூழ்நிலையை தேவசம்போர்டு விளக்கி யதால் அது தவிர்க்கப் பட்டது.பொருளாதார நெருக்கடிதேவசம்போர்டின் வருமானம் சபரிமலையை நம்பியுள்ளது.

மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்று விட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. மாநில அரசு, 70 கோடி ரூபாய் மானியம் தந்துள்ளது. சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக மாதம், 50 கோடி ரூபாய் வேண்டும்.மகர ஜோதி ஜன., 13ம் தேதி இரவு வரை வரும் பக்தர்கள், தரிசனத்துக்கு பின் திரும்பி விட வேண்டும். 14ம் தேதி வரும், 5,000 பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர். சீசனில் வரமுடியாமல் போன பக்தர்களுக்காகவும், வருமான இழப்பை சரிகட்டும் வகையிலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின், மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை, ஐந்தில் இருந்து, 10 ஆக அதிகரிப்பது பற்றி பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, தந்திரியுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar