பதிவு செய்த நாள்
11
ஜன
2021
03:01
சேலம்: சேலம் மாவட்ட, சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், எட்டாம் ஆண்டு, மார்கழி மகோத்சவ மூன்று நாள் விழா, கடந்த, 8ல் தொடங்கியது. அதன் நிறைவு நாளான இன்று, மாலை 6:00 மணிக்கு, பாரம்பரிய கலைகளான சிலம்பம், கோலாட்டம் மட்டுமின்றி, நிருத்யாலாயா பரதநாட்டிய பள்ளி பூர்ணிமா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு விழாவில், மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேச கவர்னராக இருந்த சண்முகநாதன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.