பதிவு செய்த நாள்
12
ஜன
2021
07:01
வடவள்ளி: வடவள்ளியில் உள்ள, ஸ்ரீ பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.
வடவள்ளியில் உள்ள, ஸ்ரீ பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவிலில், கடந்த, 8ம் தேதி முதல் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, லட்சார்ச்சனை நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியோட்டி, காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6:30 மணிக்கு மார்கழி பூஜையும் நடந்தது. பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல், 1:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, பிரத்யங்கிரா தேவிக்கு, நிகும்பளா யாகம் நடந்தது. நேற்று, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.