இடைப்பாடி: இடைப்பாடி, திம்மராயபெருமாள் கோவிலில் உள்ள, ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்களுக்கு கொடுப்பதற்காக லட்டுகள் தயார் நிலையில் உள்ளன. அனுமன் ஜெயந்தி விழா, நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தில் உள்ள திம்மராய பெருமாள் கோவிலில் உள்ள, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அனுமன் ஜெயந்திக்கு வரும், அனைத்து பக்தர்களுக்கும், பிரசாதமாக வழங்குவதற்கு, 5,000க்கும் மேற்பட்ட லட்டுகள் தயார் நிலையில் உள்ளன.