வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி பெருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. காலை 7 மணிமுதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், சனி பரிகார ஹோமம், பவமான மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் உற்சவர் புறப்பாடு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். கரூர் திருப்பூர் காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காலை முதல் இரவு வரை வந்து தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர்.