‛‛நாம் வைத்தது தான் சட்டம், நாம் சொல்வதை தான் மற்றவர் பின்பற்ற வேண்டும், நினைத்ததை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’’ என ஆணவத்துடன் சிலர் பேசுகின்றனர். இவர்களுக்கு ஏன் இவ்வளவு துணிச்சல் தெரியுமா? தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற எண்ணம் தான். இவர்களை நல்வழிப்படுத்த நாயகம் சொல்லும் அறிவுரை இதுவே. “உலகம் வெளி அழகில் மயங்கி ஓடுகிறது. மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்வு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதற்கான மனிதர்களாக மாறி விடுங்கள். உலக அழகில் ஈடுபடும் மனிதர்களாக ஆகி விடாதீர்கள். இங்கே செயல் மட்டுமே கேள்வி இல்லை. அங்கே கேள்வி மட்டுமே; செயல் இல்லை” ஆம்... பாவச்செயல்களில் ஈடுபட்டு பூமியில் வேண்டுமானால் பலன் பெறலாம். இங்கே கேள்வி கேட்க ஆளில்லை. கேட்டாலும் அவர்களை ஒடுக்கி விடலாம். ஆனால் அங்கே இறைவனுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். முடியாவிட்டால் நரக நெருப்பில் கிடக்க நேரிடும்.