* அறிவுள்ளவன் அதிகம் பேசாமல் அடக்கமுடன் இருப்பான். * எந்த அளவால் அளப்பீர்களோ, அந்த அளவுக்கும் கூடுதலாக உங்களுக்கு அளக்கப்படும். * மண்ணுக்குள் மண் திரும்பிப் போகும். ஆண்டவர் கொடுத்த உயிர் அவரிடமே திரும்பிப் போகும். * அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவர். * வானத்தின் உயரம், பூமியின் ஆழம், மன்னர்களின் அந்தரங்கத்தை ஆராய்ந்து அறிய முடியாது. * மனிதர்கள் அனைவரும் அறிஞர்களாக இருப்பதில்லை. * அறிவாளியின் வார்த்தைகள் கருணையை வெளிப்படுத்தும். * இனிமையாகப் பேசும் முட்டாளை விட, அறிவாளிகளின் கடுஞ்சொல்லைக் கேட்பது நல்லது. * எல்லாம் தெரியும் என ஒருவன் நினைத்தால், அவனுக்கு எதுவும் தெரியாது. * பலமும், மானமுமே ஒரு பெண்ணின் ஆடைகள். பைபிள்