விநாயகரை வழிபடுவது காணாபத்யம். முருகனை வழிபடுவது கவுமாரம். சக்தி வழிபாடு சாக்தம். சிவனை வழிபடுவது சைவம், திருமாலை வழிபடுவது வைணவம். அது போல சூரியனை வழிபடுவதற்கு சவுரம் என்று பெயர். இந்த வழிபாடுகளில் சூரியன் தவிர, மற்ற தெய்வத்தை கண்களால் காண முடியாது. சூரியனை மட்டும் கண்களால் காண்கிறோம். கோயில்களில் பரிவார தெய்வமாக இருக்கிறார்.