பதிவு செய்த நாள்
15
ஜன
2021
01:01
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் எழுந்தருளி, சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 5ம் தேதி, உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் காலை, மாலை என, இரு வேளைகளிலும், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.நேற்று காலை, தாமரைக்குள கரையில், விநாயகர், சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், தாமரை குளத்தில், தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து இன்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு இடையே ஏற்படும் ஊடலை நினைவு கூரும் வகையில், திருவூடல் உற்சவம் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் நடைபெற்றது. உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி, சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.