பதிவு செய்த நாள்
18
ஜன
2021
06:01
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக்குழுவின் 26ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. புன்செய்புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக்குழு ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று, ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். நடப்பாண்டு இருமுடி கட்டும் நிகழ்ச்சி மற்றும் 26ம் ஆண்டு விழா, நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலையில், 108 விளக்கு பூஜை நடநத்து. தொடர்ந்து, தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் சிலைக்கு முன்பாக, 18ம் படி அமைக்கப்பட்டு, பூஜை நடந்தது. பின், ஐயப்பன் உற்சவர் உள்ள பதினெட்டு படிகளிலும், மலர்களால் பூஜை செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டன. கோவில் மண்டபத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக, 40 பக்தர்கள், இருமுடி கட்டி, சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.