பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழா: ஜன.22ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2021 09:01
பழநி : பழநி முருகன் கோயில் தைப்பூசவிழா ஜன.22ல் துவங்கி ஜன.31 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஜன.27ல் திருக்கல்யாணம், ஜன.28 தைப்பூச நாளில் தேரோட்டம் நடக்கிறது.பழநி தைப்பூச திருவிழா அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது.
ஜன.22ல் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் துவங்குகிறது. அன்று காலை 7:00 மணிக்கு மேல் 8:15 மணிக்குள் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம்நாள் இரவு 7:30 மணிக்கு மேல் இரவு 8:30 மணிக்குள் வள்ளி தெய்வநாயகி, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.முக்கிய விழாக்கள் ஏழாம் நாளான ஜன.,28ல் தைப்பூச தேரோட்டம் நடைபெறும். பெரியநாயகியம்மன் கோயில் தேரடியிலிருந்து மாலை 4:30 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளி வலம் வருவார்.
திருவிழாவின் அனைத்து நாட்களிலும் வள்ளி-தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெறும்.பத்தாம் நாள்(ஜன.31) இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுபெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.