Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிப்., 2ல் திருவையாறில் தியாகராஜர் ... ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு
எழுத்தின் அளவு:
சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
03:01

புதுடில்லி: குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி, ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பின் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

குஜராத்தின், கிர் சோம்நாத் மாவட்டத்தில், 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான, சோம்நாத் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் அறக்கட்டளை தலைவராக இருந்த அம்மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல், கடந்த 2020 அக்., மாதம் காலமானதை தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக, நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் கடந்த ஜன.,11ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதாக இருந்ததால், கூட்டம் 18 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று நடந்த கூட்டத்தில், சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவிக்கு, மோடியின் பெயரை, உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரை செய்தார். இதனை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். இதனையடுத்து, அறக்கட்டளை தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவராக மோடி உள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களாக, அமித்ஷா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கோல்கட்டாவை சேர்ந்த கட்டுமான நிறுவனமான அம்புஜா நியோடியா நிறுவன சேர்மன் ஹர்ஷ்வர்தன் நியோடியா, குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலர் பிரவின் லஹரி, ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் வராவல், ஜீவன் பர்மர் ஆகியோர், உள்ளனர். இந்த அறக்கட்டளை உறுப்பினர் பதவிக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 4 பேரை பரிந்துரை செய்ய முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar