பதிவு செய்த நாள்
19
ஜன
2021
04:01
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமானோர் பழநிக்கு பாதயாத்திரை சென்றுள்ளதால், நகரம் வெறிச்சோடியது.
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், வெப்படை, ஆலாம்பாளையம், ஆவத்திபாளையம், காவேரி, ஓடப்பள்ளி மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தை மாதம் பழநிக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு, மார்கழி கடைசி வாரத்தில் இருந்து, மாலை அணிந்து விரதம் இருந்து, தை முதல் நாளிலிருந்து பாதயாத்திரை செல்ல தொடங்கினர். தொடர்ந்து சென்று கொண்டுள்ளனர். சுற்றுவட்டாரத்தில், 70 சதவீதம் பேர் பழநிக்கு சென்று விட்டதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும், ராஜவீதி, ஆர்.எஸ்.,சாலை, காந்திபுரம் வீதி மற்றும் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பாதயாத்திரைக்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் விசைத்தறி தொழிலாளர்கள் என்பதால், விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. சத்தம் இல்லாமல் அமைதியாக காணப்படுகிறது. ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி, உள்பட பல கடைகளும் மூடப்பட்டுள்ளன.