திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வரும் 22ந்தேதியும் , 28-ந்தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.
திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மாள் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களின் அபிசேஷகம், மகாதீபாராதனை , சிறப்பு பூஜை நடந்தது. 12 நாட்கள் விழா நடக்கிறது. வரும் 22ல் திருநெல்வேலி என்ற பெயர்வரக்காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும் , 28ந்தேதி தாமிரபரணியில் தைப்பூச தீர்த்தவாரியும் நடக்கிறது. 29-ந்தேதி கோவில் சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி முனி சிரேஷ்ட்டர்களுக்கு திருநடனம் நடக்கிறது. 30ந்தேதி சந்திர புஷ்கரன் என்கிற வெளித் தெப்பத்தில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்திருவிழா நடக்கிறது.