Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன் கோட்டையில் செவ்வாய் ... திருப்பதி ஏழுமலையானுக்கு முஸ்லிம்கள் நன்கொடை திருப்பதி ஏழுமலையானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
11:01

திருப்பரங்குன்றம்:தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள சடையால்பட்டியில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய நில எல்லை கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ராஜகோபால் கண்டுபிடித்தார்.

அவர் கூறியதாவது: பழங்கால கல்வெட்டுக்கள் தொடர்பாக தேனி மாவட்ட கிராமங்களில் ஆய்வு நடத்தினேன். சடையால்பட்டி ஜெயக்குமார் தந்த தகவலின்படி அவரது விளைநிலத்தில் பெரிய அளவில் கல் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் இருந்ததை மீட்டோம்.ஒன்றரை அடி அகலம், இரண்டரை அடி நீளம் இருந்த அந்த கல்வெட்டில் பழங்கால எழுத்துக்கள் இருந்தன. கல்வெட்டு மேல் விளிம்பில் இருந்த சில குறியீடுகள் இயற்கை சூழல் காரணமாக சேமடைந்திருந்தன. 5 வரிகளில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.

அதிலுள்ள எழுத்து வடிவைக்கொண்டு பார்க்கும் போது 13ம் நுாற்றாண்டு பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது எனவும், 800 ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிந்தது. தெற்கு திசை நோக்கி இருந்த இக்கல்வெட்டில் ஸவஸ்த்ஸ்ரீ ஸவணனர் நிலத்துக்கு தென் எல்லை என பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டிலுள்ள வாசகங்களை மதுரை தொல்லியல் துறையின் முன்னாள் நிபுணர் சாந்தலிங்கம் உதவியுடன் பொருள் கண்டறியப்பட்டது. ஸவஸ்த்ஸ்ரீ என்பது பக்திச் சொல் வடிவத்திலும், ஸவணனர் என்பது பிராமணர் மக்கள் எனவும் பொருள். அதாவது பிராமணர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்துக்கு தென் எல்லை என எழுதப்பட்டுள்ளது. அக்கால ஆட்சியாளர்கள் நில தர்மங்களை வழங்கி அது யாருக்கு வழங்கப்பட்டது என்பதையும் அதன் எல்லை உரிமைகளை சுட்டிக்காட்டி உள்ளனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar