பதிவு செய்த நாள்
20
ஜன
2021
12:01
மாமல்லபுரத்தில், பல்லவர் கால, அர்ச்சுனன் தபசு சிற்ப தொகுப்பு உள்ளது. இதில் இடம் பெற்ற இரு மான் சிற்பம், பழைய, 10 ரூபாய் தாளை அலங்கரித்தது.
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள, கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் தொல்லியல் சின்னங்களில், அர்ச்சுனன் தபசு தொகுப்புச் சிற்பம் குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட பாறையின் விளிம்பில், நிலமட்டத்தின் கீழ், மேலாக, இச்சிற்பம், புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டது. சிவபெருமான், தேவர், சித்தர், முனிவர், பக்தர், வனம், யானை உள்ளிட்ட விலங்குகள், நாகங்கள், கங்கை நதி உள்ளிட்டவை, இச்சிற்பத்தில், தொகுப்பாக உள்ளன. முன்னாள் பிரதமர், இந்திரா, 1976ல், இங்கு சுற்றுலா வந்தார். அர்ச்சுனன் தபசு சிற்பம், அவரை ஈர்த்தது. தன்னை ஈர்த்த மான் சிற்பங்களை, 1984ல், 10 ரூபாய் தாளில், இடம்பெற வைத்து, சிறப்பித்தார். தற்போது, அந்த ரூபாய் தாள், புழக்கத்தில் இல்லை.சுற்றுலா வழிகாட்டி சிலர், இந்த ரூபாய் தாளை பாதுகாத்து, இதில், மான் சிற்பங்கள் இடம் பெற்ற பின்னணியை விளக்கும் போது, பயணியர் வியக்கின்றனர்.