பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் வசதிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2021 02:01
ஒட்டன்சத்திரம் : பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது
தைப்பூசத்தில் பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். பல வழிகளில் இருந்து வரும் பக்தர்கள், ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே வழியில் தான் செல்ல வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களுக்கு நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் பக்தர்கள் இளைப்பாறவும், இரவு நேரத்தில் தங்கி செல்லவும்நிழற்பந்தல்களும், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு இடங்களில் தற்காலிக கழிவறைகள், குப்பைகளை அகற்ற கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.