* பெற்றோரின் பேச்சை புறக்கணிப்பது மன்னிக்க முடியாத குற்றம். * இரக்கம் கொண்ட இதயத்தில் தெய்வம் குடியிருக்கும். * புறம் பேசி மற்றவர் குடும்பத்தில் கலகம் உண்டாக்காதீர். * உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரின் உறவு கூடாது. * நீதி, நேர்மையை பின்பற்றி நடப்பவர்களே உயர்ந்த மனிதர்கள். * எளிய உயிர்களுக்கும் உதவி செய்வதே உயர்ந்த பண்பு. * மன ஒருமையுடன் பக்தியில் ஈடுபடும் உத்தமர் உறவை நாடுங்கள். * எந்தச் சூழலிலும் உண்மை ஒருவனுக்கு பாதுகாப்பு அளிக்கும். * நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே ஒழுக்கமுடன் வாழ முடியும். * நல்லோர் மனம் நடுங்கச் செய்வதும், தானம் செய்வதை தடுப்பதும் பெரும் பாவம். * மாமிசம் சாப்பிட்டு உடலை வளர்ப்பவன் இழிநிலைக்கு ஆளாவான். * கடவுளுக்காக செலவழிக்க விரும்பினால் ஏழைகளுக்கு உதவுங்கள். * பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமல் உங்களின் தவறை திருத்துங்கள். * ஏழைகளின் பசியை போக்கினால் கடவுளின் உள்ளம் குளிரும். * பிறருக்கு மட்டுமின்றி தனக்கும் கோபம் தீமையே செய்கிறது. * அனைவரும் கல்வி கற்க வேண்டும். * பசியை பொறுப்பதை விட உயிர்களை கொல்லாமல் இருப்பது சிறந்தது.