* அதிக நேரம் துாங்குவது நல்லதல்ல. * உதவி கேட்டு வருவோருக்கு முடிந்ததை செய்யுங்கள். * உங்களின் வசதிற்கு ஏற்ப தானம், தர்மம் செய்யுங்கள். * இன்பமாகத் தோன்றி பிறகு துன்பம் தரும் பழக்கங்களுக்கு இடம் தராதீர். * நல்ல செயல்களை முன் நின்று நடத்துங்கள். * படித்த நுாலுக்கு ஏற்ப ஒருவனின் புத்திக்கூர்மை வெளிப்படும். * கருணையே ஆன்மிகத்தின் ஆணிவேர். * சோர்வுடன் பேசினால் அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்காது. * நல்வழி காட்டும் நல்லவரோடு பழகுங்கள். * மற்றவர்களின் உள்ளக் குறிப்பறிந்து செயல்படுபவனே புத்திசாலி. * வறுமையை விடக் கொடியது இளமையில் வறுமை. * தர்மம் ஒன்றே வாழ்வுக்கு பின்னும் துணையாக வரும். * எந்தச் செயலையும் அதற்குரிய காலத்திற்குள் செய்ய வேண்டும். * நல்ல மனைவி அமைந்தால் குடும்பம் கோயிலாக இருக்கும். * செல்வம் மிக்க குடும்பத்தில் பிறப்பதை விட ஒழுக்கமுடன் வாழ்வது மேல். * பாலைத் தரும் பசு போல பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கொள். * அறிஞர்கள் சென்ற இடம் எல்லாம் அனைவராலும் மதிக்கப்படுவர். * விஷமுள்ள பாம்பு போல தீயவர்கள் மறைந்து வாழ விரும்புவர்.