‘‘ நான் இதை செய்து கொடுப்பேன். இந்த தவறை நான் செய்யவில்லை,’’ என்று தன் தலை மீதோ, பிள்ளைகளின் தலை மீதோ கைவைத்து சத்தியம் செய்வதுண்டு. சிலர் ‘‘ அப்படி நான் செய்யவில்லை’’ என்றும் மறுப்பதும் உண்டு. இப்படி செய்வது சரியல்ல. ‘‘உன் தலையின் மீது ஆணையிட வேண்டாம். ஏனெனில் அதிலுள்ள ஒரு ரோமத்தைக் கூட கருப்பாகவோ, வெளுப்பாகவோ உன்னால் ஆக்க முடியாது. அதனால் உன் பேச்சு ‘ஆமாம் அல்லது ‘இல்லை’ என்பதோடு அமையட்டும். எதன் மீது சத்தியம் செய்ய வேண்டாம். பரலோகத்தின் மீதும், பூமியின் மீதும் ஆணையிட வேண்டாம். ஏனெனில் பரலோகம் அவரது சிம்மாசனம். பூமிய அவரது பலிபீடம்’’ அதனால் இனி தவிருங்கள்.