திருவாடானையிலிருந்து பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2021 09:01
திருவாடானை : திருவாடானையிலிருந்து பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப் பட்டு சென்றனர். முன்னதாக ராமர் பஜனை மடத்தில் சிறப்புபூஜை நடந்தது.இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம்வழங்கபட்டது. திருவாடானை, தொண்டிபகுதியிலிருந்து தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வது வழக்கம். இந்தஆண்டு கொரோனா அச்சத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே சென்றனர்.