Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானையிலிருந்து பழநிக்கு ... கோதண்டராமர் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் கோதண்டராமர் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வருண பகவானின் ஆசியோடு மருதமலையில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வருண பகவானின் ஆசியோடு மருதமலையில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
09:01

 வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத்தை ஒட்டி, வருண பகவானின் ஆசியோடு, கோவிலில் கொடியேற்றப்பட்டது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மற்றும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவையெட்டி, நேற்று முன்தினம் இரவு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. விநாயகருக்கு புன்யாகவாசனம், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், யாக வேள்வி, இறை அனுமதி பெறுதல் உள்ளிட்டவைகள் நடந்தன. காலை, 7:45 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சேவற்கொடி பொறிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட, 25 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்டிருந்த கொடி, கோவில் முகப்பில் உள்ள கொடிமரத்தில், கொடி மங்கல நாண்களால் ஏற்றப்பட்டது. கொடி மரத்தில், கொடி ஏற்றும் போது, திடீரென மழை பெய்தது. இதனைக்கண்டு பரவசமடைந்த பக்தர்கள், அரோகரா, அரோகரா என்று கோஷம் எழுப்பினர். சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவ மூர்த்தியான, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதரமாக, கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர். மாலையில், அனந்தாசனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar