கடலாடி : கடலாடி ஐயப்பசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சர்வ தீர்த்த விநாயகர் கோயிலில் டிச., 4 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர் சர்வ தீர்த்த விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட11 வகையான அபிஷேக ஆராதனை,அன்னதானம் நடந்தது. ஐயப்பன் கோயில் குருசாமி கருப்பையா, மகேந்திரபாண்டியன், உள்ளிட்ட பக்தர்கள் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.