பதிவு செய்த நாள்
23
ஜன
2021
02:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 31ம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், தெற்கு வீதியில் அமைந்துள்ள, பழமையான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக 30ம் தேதி காலை 7:00 மணிக்கு கலச ஸ்தாபனம் 10:30 மணிக்கு ஹோமங்கள் மாலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், கும்பாபிஷேக தினமான 31ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், மூன்றாம் கால யாகசாலை பூஜை துவக்கம், 7:00 மணிக்கு மஹா பூர்ணாகுதி, 7:30 மணிக்கு யாத்ரா தானம், 7:45 மணி முதல் மூலவர் விமானம், ராஜகோபுரம், தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முரளிதர ஐயர் யாகசாலை பூஜைகளை முன்னின்று நடத்த, ஆரிய வைசிய சங்க தலைவர் சர்வேஸ்வரன் தலைமையிலான சமூகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.