பதிவு செய்த நாள்
24
ஜன
2021
06:01
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவின் இரண்டாம் நாளில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், தைப்பூச திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு, சூரிய பிரபையிலும், மாலை, 5:00 மணிக்கு, கேடயத்திலும், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசித்து சென்றனர்.