பதிவு செய்த நாள்
24
ஜன
2021
07:01
மாமல்லபுரம் : மும்பை கோவிலுக்கு, மாமல்லபுரத்தில், பிரமாண்ட விநாயகர் கற்சிலை வடிக்கப்பட்டது.
வட மாநிலமான மஹாராஷ்டிராவில், மும்பை அடுத்த பல்கார் பகுதியில், தனியார் அறக்கட்டளை நிறுவனம், ஜீவ்தானி தேவி சன்ஸ்தன் அம்மன் கோவில் அமைக்கிறது.இக்கோவிலில், பிரமாண்ட விநாயகர் கற்சிலை, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, மாமல்லபுரம் பகுதியில், பாபா ஸ்டோன்ஸ் என்ற தனியார் சிற்பக்கூடத்தில், அபய திருக்கோலத்தில், நான்கு கைகளில், பாசம், அபயம், அங்குசம், லட்டு ஆகியவை ஏந்திய விநாயகர் கற்சிலை, அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம், 10 அடி; கனம், 3.5 அடி. எடை, 10 டன். சிற்பி பாலன் அறிவுமணி கூறுகையில், இரு மாதங்களில், விநாயகர் சிலையை வடித்தோம். சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, கன்டெய்னர் லாரி மூலம், மும்பைக்கு அனுப்பி உள்ளோம், என்றார்.