திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் நான்காம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, நேற்று இரவு தங்க பூத வாகனத்தில், வெள்ளி கவசம் அலங்காரத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.