பதிவு செய்த நாள்
27
ஜன
2021
11:01
வடலுார் : கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், இன்று காலை, 5:00 மணிக்கு, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டு, 7:30 மணிக்கு, சத்திய தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, ஞானசபையில் கொடி ஏற்றப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, தருமசாலை பிரசங்க மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இதேபோல, மேட்டுக்குப்பம், சித்தி வளாகத்திலும், இன்று காலை, 8:00 மணிக்கு சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.. மாலை, 5:00 மணிக்கு மகா மந்திரம் ஓதுதல், 7:00 மணிக்கு, திருஅருட்பா பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதையடுத்து, தைப்பூச தினமான நாளை 28ம் தேதி, ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், 30ம் தேதி மதியம், 12:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, திருஅறை தரிசனம் நடக்கிறது.