பதிவு செய்த நாள்
27
ஜன
2021
12:01
திருவாரூர் : ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரம், சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று, வருஷாபிஷேக விழா நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு ஸ்தலம் அருகே, திருவோணமங்கலம் ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரத்தில், ஸ்ரீசங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு, ஸ்ரீஜகத்குரு சங்கராச்சாரியார், சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீவித்யா அபிநவ கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளால் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து, ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு, இன்று கோவிலில் வருஷாபிஷேகம் நடக்கிறது. ஆசார்ய மஹா சுவாமிகள் முன்னிலையில், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீசங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர், சீதா, லட்சுமண, அனுமத் சமேத கோதண்டராமர் சுவாமிகளுக்கு காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலையில் ரத உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணா ஆலோசனைப்படி, திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் செய்து வருகிறார்.