புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.புதுச்சேரி கிழக்கு கடற் கரைச்சாலை கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு மங்கள திரவியங்கால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட் டது. ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, சீனு குருக்கள், சேது குருக்கள், சுரேஷ் குருக்கள், கோவில் சிறப்பு அதிகாரி மணிகண்டன் செய்திருந்தனர்.