பதிவு செய்த நாள்
28
ஜன
2021
12:01
மேல்மருவத்துார், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெறுகிறது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச ஜோதி பெருவிழா, நாளை நடைபெறுகிறது.முன்னதாக, இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் ஆதிபாரசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகத்தையும், மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு வேள்வி பூஜையையும், லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைக்கிறார்.நாளை அதிகாலை, 3:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகத்தையும், மாலை, 4:45 மணிக்கு, தைப்பூச ஜோதி ஊர்வலத்தையும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.மாலை, 6:15 மணிக்கு, பங்காரு அடிகளார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் ஆகியோர், தைப்பூச ஜோதியை ஏற்றி வைக்கின்றனர்.விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்கள் மற்றும் ஈடுரோடு மாவட்ட நிர்வாகத்தினர் செய்கின்றனர்.