சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி திட்சிதர் எட்டையபுரத்தில் நடக்க இருந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க மாட்டுவண்டியில் சென்றார், எட்டையபுரம் செல்லும் வழியில் வறட்சி நிலவியது. வறுமையால் செய்வதறியாமல் விவசாயிகள் தவித்தனர். இதைக் கண்ட தீட்சிதர் மனம் வருந்தினார். அமிர்தவர்ஷினி ராகத்தில் பராசக்தியைப் பாடினார். சிறிது நேரத்தில் குளிர் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மீண்டும் பாடல் பாடி மழையை நிற்கச் செய்தார். இதை அறிந்த மக்கள் தீட்சிதரின் தெய்வீக சக்தியறிந்து நன்றி தெரிவித்தனர். ‘எல்லாம் அம்பாளின் மகிமை. அவளை சரணடைந்து நலமுடன் வாழுங்கள்’’ என்று சொல்லி புறப்பட்டார்.