‘கந்தன்’ என்னும் சொல்லுக்கு ‘பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர்’ என்பது பொருள். பகைவர் என்றால் வெளியில் இருந்து வருபவர் அல்ல. மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. தேவையில்லாததை எல்லாம் சிந்திக்கிறது. இந்த மனப்பகைவனிடம் இருந்து நம்மைக் காப்பவன் கந்தன். ‘கந்து’ என்றால் ‘யானையைக் கட்டிப்போடும் தறி’. உயிர்கள் என்னும் யானைகளை எல்லாம் ஆசைகளில் இருந்து மீட்டு கட்டிப் போடுபவன் என்பதால் அவர் ‘கந்தன்’ ஆனார். ‘கந்து’ என்ற சொல்லுக்கு ‘பற்றுக்கோடு’ என்றும் பொருள் உண்டு. உயிர்கள் கந்தப்பெருமானின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் பிறவிச்சுழலில் இருந்து தப்பிக்க முடியும்.