பதிவு செய்த நாள்
28
ஜன
2021
10:01
புதுச்சேரி; கொம்பாக்கம் புது நகரம் முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.முதலியார்பேட்டை கொம்பாக்கம் புதுநகரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், பரிவார தெய்வங்கள் விநாயகர், முருகர், துர்க்கை, நவகிரகங்கள் புதிதாக அமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா கடந்த 25ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 26ம் தேதி கோபுர கலசங்கள் நிறுவப்பட்டு, முதற்கால பூஜை நடந்தது. நேற்று முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளுடன் துவங்கியது. 9.30 மணிக்கு விமானம், மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு, அறங்காவலர் குழு, கிராம மக்கள் செய்திருந்தனர்.