பதிவு செய்த நாள்
28
ஜன
2021
11:01
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று மாலை சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகின்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் 2 சுவாமிகள் இன்று புறப்பாடாவர்.கோயில் திருவிழாக்காலங்களில் அபிஷேகம், பூஜைகள், தெப்பத்திருவிழா, சூரசம்ஹார லீலை, வீதி உலா நிகழ்ச்சி, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், ஆவணி மூல திருவிழாக்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பங்கேற்பர். தைப்பூசத்தன்று மட்டும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்து வீதி உலா நடக்கும். இந்தாண்டு கொரோனா தடையுத்தரவால் சுவாமிகள் கோயிலுக்குள் இன்று மாலை 6:30 மணிக்கு புறப்பாடாகின்றனர்.