பதிவு செய்த நாள்
29
ஜன
2021
11:01
விருதுநகர்; விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூச விழா தேரோட்டம்,காவடி , திருக்கல்யாணத்துடன் கோலாகலமாக நடந்தது.
முருகப் பெருமானுக்கு உகந்த தைப்பூசம் அனைத்து முருகன் கோயில்களிலும் நடந்தது. இதையொட்டி சேவல் கொடி, காவிக்கொடி, மயில்கொடி ஏந்தி காவடியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். மாவிளக்கு, பஞ்சாமிர்தம், அன்னதானமும் வழங்கப்பட்டது.விருதுநகர் ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இவ்விழா ஜன.22ல் கோடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி சிறப்பு பூஜை ,அபிேஷகம் , திருக்கல்யாணம் நடந்தது.
திரளான பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர்.காரியாபட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. சாத்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காத்துடன் சுவாமி வலம் வந்தார். வாணிப செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட சுப்பிரமணியசுவாமி கோயிலில் காலையில் சிறப்பு அலங்காரம், மாலையில் திருவீதி உலா ,அன்னதானம் வழங்கப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைத்தியநாதர், சிவகாமி அம்பாள், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகளை ரகு பட்டர் செய்தார். பழனியாண்டர் கோயில், நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.சிவகாசி: இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமை பண்டுக்குக்கு பாத்தியப்பட்ட சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜன.19 ல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .
தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சட்டத்தேர் திருவிழா நடந்தது. தேரானது நான்கு ரத வீதி வழியாக சுற்றி வந்தது. அப்போது பக்தரின் பறவை காவடி நிகழ்ச்சியும் நடந்தது. இைத தொடர்ந்து இரவில் தங்கத்தேர் வீதி உலா நடந்தது.ராஜபாளையம் : மாயூரநாத சுவாமி கோயில் சொக்கர் கோயில், அம்பல புளி பஜார் சுப்பிரமணியர் கோயில், அண்ணாமலை ஈஸ்வரர் கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில், தளவாய்புரம் தொப்பையங்குளம் சுப்பிரமணியர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில், மொட்ட மலை பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மற்றும் அந்தந்த பகுதி தெருக்களில் உள்ள முருகன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் பால்குடம், அன்னதானமும் நடந்தது.சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் முருகன் கோயில்களில் விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தெருக்கலில் உள்ள முருகன் கோயில்களில் விஷேச பூஜைகளும், அன்னதானமும் நடந்தது.ஏற்பாடுகளை சாலியர் சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.