பதிவு செய்த நாள்
29
ஜன
2021
05:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறி, பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையிலுள்ள மலையை பக்தர்கள் சிவனாக பாவித்து வழிபடுகின்றனர். இதனால், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தை மாத பவுர்ணமி திதி நேற்று அதிகாலை, 1:35 முதல், இன்று(29) அதிகாலை, 12:55 மணி வரை உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், கடந்த, 11 மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல், பக்தர்கள் நேற்று, கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். வழக்கமாக பவுர்ணமி நாளில் தடை செய்யப்பட்ட நேரத்தில் கிரிவலப்பாதையில், போலீசார் ஆங்காங்கே நின்று, பக்தர்களை கிரிவலம் செல்லாமல் திருப்பி அனுப்பி வந்தனர். ஆனால், நேற்று, தை மாத பவுர்ணமி தினத்தில், போலீசார் கிரிவலம் செல்பவர்களை கண்டும் காணாமல் அனுமதித்தனர். அதனால், பக்தர்கள் எவ்வித சிரமம் இன்றி கிரிவலம் சென்றனர்.