பதிவு செய்த நாள்
29
ஜன
2021
05:01
ராமநாதபுரம் ; தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷக, பூஜைகள் நடந்தது.ராமநாதபுரம் குண்டுக் கரை சுவாமிநாத சுவாமி கோயிலில், வழிவிடு முருகன்கோயில், வெளிப்பட்டினம் பால பாலதண்டாயுதசுவாமி கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் வினைதீர்க்கும் வேலவர் கோயில், ராமநாதபுரம் வடக்குதெரு பாலசுப்பிரமணியசுவாமி கோயில், ராமேஸ்வரம் ரோடு குமராய்யாசுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில், சிறப்பு யாகபூஜை, அபிேஷகம், சர்வ அலங்காரத்தில் மகா தீபாராதனை மற்றும் உற்ஸவர் வீதிஉலா நடந்தது. அழகன்குளம் அருகே நாடார் வலசையில் செல்வகணபதி, பாலமுருகன்கோயிலில் பால்குடம், காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி: கமுதி அருகே மேலக்கொடுமலுார் கிராமத்தில் குமரக்கடவுள் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு சுவாமிக்கு காலை 4:30 மணிக்கு பால்,பன்னீர்,சந்தனம் உட்பட 21 வகையான அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.மூட்டு வலிபோக்கும் ஸ்தலமாக விளங்குவதால் ஏராளமான பக்தர்கள் உடைமரம் குச்சிகளை நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகன் வெள்ளி கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி, வீரசோழன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று முதுகுளத்துார், கமுதி பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பாலதண்டாயுதபாணி சன்னதியில், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசம் பக்திபாடல்களை பாடினர்.