பதிவு செய்த நாள்
29
ஜன
2021
05:01
ப.வேலூர்: கபிலர்மலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 20ல் கொடியேற்றத்துடன் தொடங்கி தைப்பூச திருத்தேர் திருவிழா நடந்து வருகிறது. தினசரி காலை பல்லக்கு உற்சவம், இரவு அன்னம், ரிஷபம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில், சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், வேத மந்திரங்கள் முழங்க, பாலசுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணமும் நடந்தது. தைப்பூச தினத்தையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்?ச்சி நடந்தது. மாலை, 5:00 மணியளவில் தேர்நிலை சேர்ந்தது. சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வகையான காவடிகளுடன், நடைபயணமாக வந்தனர். ஏற்பாடுகளை கபிலர்மலை விழா குழுவினர், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.