திருக்கனுார் - திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில், தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வரப்பட்டது. பின், மஞ்சள் இடித்தல், 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்த தேவராசு என்பவருக்கு, மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.காலை 10 மணிக்கு ஆகாய மாலை அணிவித்து, செடல் உற்சவம் நடந்தது. காலை 11:30 மணிக்கு, மாலை அணிந்த பக்தர்கள் வேல் அணிந்து, டயர் வண்டி இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். செட்டிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.