பதிவு செய்த நாள்
29
ஜன
2021
06:01
புதுச்சேரி - லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச காவடி உற்சவம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள செண்பக விநாயகர் கோவிலில் காவடிக்கு அபிேஷகம், பால் குடங்களுக்கு பூஜை செய்து ஊர்வலமாக சிவசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டனர். காவடி, பால் குட ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன், சிவ பழனி ஆண்டவருக்கு பால் அபிேஷகம் நடந்தது. மாலையில் சிவ பழனி ஆண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், சுவாமி வீதியுலா நடந்தது. புதுச்சேரியில் அனைத்து முருகர் கோவில்களிலும் நேற்று தைப்பூச விழா நடந்தது.திருக்கனுார்திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில், தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வரப்பட்டது. பின், மஞ்சள் இடித்தல், 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்த தேவராசு என்பவருக்கு, மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.காலை 10 மணிக்கு ஆகாய மாலை அணிவித்து, செடல் உற்சவம் நடந்தது. காலை 11:30 மணிக்கு பக்தர்கள் செடல்குத்தி, டயர் வண்டியை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். செட்டிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.