வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தாணிப்பாறையில் குவிந்திருந்தனர். காலை 6:45 மணிக்கு அறநிலையத்துறை பரிசோதனைக்கு பின் மலையேற அனுமதிக்கபட்டனர். மதியம் 1:00 மணி வரை 5 ஆயிரம் பக்தர்கள் மலையேறினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி பூஜைகள், பல்வேறு அபிேஷகங்கள் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல்அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர்.