திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத செல்வ முருகன் கோவிலில் தைப்பூச தீமிதி, காவடி, திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.காலை 5 மணிக்கு செல்வ முருகன் சுவாமி மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணி அளவில், தைப்பூச தீமிதி காவடி உற்சவம் நடந்தது. பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.மாலை 5 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத செல்வ முருகன் சுவாமிக்கு திருக் கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.