பதிவு செய்த நாள்
29
ஜன
2021
06:01
ராமேஸ்வரம் - ராமேஸ்வரம் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி தெப்ப தேர் உலா நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, திருக்கோயில் உப கோயிலான லெட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். காலை 10:30 மணி முதல் கோயில் நடை சாத்தப்பட்டது. பின் லெட்சுமணேஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்ததும், அங்குள்ள தீர்த்த குளத்தில் மின்விளக்கில் அலங்கரித்த தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். பின் தெப்ப தேரின் வடத்தை பக்தர்கள் இழுத்து 11 முறை தீர்த்த குளத்தை வலம் வந்ததும், அங்கு கூடியிருந்த கோயில் இணை ஆணையர் கல்யாணி, கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலை செல்வம் மற்றும் ஏரா ளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு 8:30 மணிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடாகி கோயிலுக்கு சென்றதும் நடை திறக்கப்பட்டு அர்த்தசாமம், பள்ளியறை பூஜை நடத்தப்பட்டது.