பதிவு செய்த நாள்
29
ஜன
2021
06:01
புதுச்சேரி - காஞ்சிமாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மைய பேராசிரியர் கிருஷ்ணகுமார் எழுதிய அன்பின் உரு அருளின் தரு வள்ளலார் என்ற நுால் வெளியீட்டு விழா லாஸ்பேட்டை சாந்தி நகர் மூகாம்பிகை கோவில் வளா கத்தில் நேற்று நடந்தது.
முனைவர் வேதாகமம் வரவேற்றார். நுாலை முன் னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் வெளியிட, காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை தலைவர் நிர்மலா பெற்றுக் கொண்டார். புதுச்சேரி பல்கலை., பேராசிரியர் ரவிக்குமார், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குனர் சம்பத், பேராசிரியர்கள் சிவமாதவன், கருணாநிதி, கொழந்தசாமி, சேதுபதி, முருகையன், அன்புசெல்வன், ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நுாலாசிரியர் கிருஷ்ண குமார் ஏற்புரையாற்றினார். பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், உலக தமிழ்பேரவை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இலக்கிய சோலை தமிழ்மன்றம் நிறு வனர் வடுகை கண்ணன், புதுச்சேரி தமிழ் சங்க பொருளாளர் திருநாவுக்கரசு, பாவலர் பயிற்சி பட்டறை மன்ற தலைவர் அசோகா சுப்பிரமணின், படைப்பாளர் இயக்க தலைவர் கலியபெருமாள், வீரத்தமிழரசி இலக்கிய சமூக அமைப்பு தலைவர் கலைவரதன், குறளிசைக்கூடு கவுரவ தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.