ஜெயின் கோவில் செல்ல வழி; மக்கள் சம்மதத்துடன் ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2021 06:01
திருப்பூர் : வாலிபாளையம் ஜெயின் கோவிலுக்கு வழி ஏற்படுத்த, வேப்ப மரம் வெட்டி அகற்றப்பட்டது. திருப்பூர், வாலிபாளையம் பகுதியில் மகாவீர் காலனி பின்புறம் ஜெயின் கோவில் உள்ளது. கோவில் வாசலுக்கு நேர் எதிரில் மகாவீர் காலனியில் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. இந்த சுவரை அகற்றி விட்டு பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக வழி அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.இதற்காக காலனியில் வசிப்போர் சம்மதத்துடன் கோவிலுக்கு எதிரில் இருந்த சுற்றுச் சுவர் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான கேட் அமைக்க வசதியாக அங்கிருந்த வேப்பமரம் வெட்டி அகற்றி பணி துவங்கியது. கோவிலுக்கு நேர் எதிரே உயரமான சுவர் உள்ளதால் அதை பாதையாக மாற்ற ஜெயின் சமூகத்தினர் ஆலோசனை வழங்கியதால், இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவில் கமிட்டியினர் தெரிவித்தனர். வெட்டி அகற்றிய மரத்துக்குப் பதிலாக அதே பகுதியில் மேலும் சில மரக்கன்றுகள் நட்டி பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.