கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா: பிப்.11ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2021 04:01
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக் கால் நடப்பட்டது.திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பிப்.11ம் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்க உள்ளது. இதையொட்டி நேற்று முகூர்த்தக் கால் நடப்பட்டது.முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர்கள் சுபாஷினி, பாலசுந்தரம், பாலகுரு, கணேசன் பங்கேற்றனர். பிப்.12ல் பூச்சொரிதல், பிப்.14ல் சாட்டுதல், பிப்.16ல் கொடியேற்றம் நடக்கிறது. பிப்.27 ல் தசாவதாரம், மார்ச் 1ல் கொடியிறக்குதல், மார்ச் 2 ல் தெப்ப உற்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொரோனாவால் இந்தாண்டு அம்பாள் வீதியுலா கோயில் வெளிப்பிரகாரத்தில் மட்டுமே நடக்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.