சென்னை:அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு நிதி வழங்கும் விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நாளை நடக்கிறது.
உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுகிறது.குழந்தை வரம் வேண்டிய தசரதன், காஞ்சிபுரம் அம்மனை தரிசித்த பின் ராமர் பிறந்தார் என்பது ஐதீகம். மனிதனாகப் பிறந்து அனைவரும் போற்றும் கடவுளாக மக்களின் மனதில் வாழ்பவர் ராமர். அவருக்கு கோயில் எழுப்பும் புனித பணியில் அனைவருக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.
அதற்காக காஞ்சி சங்கர மடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், நன்கொடை பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.இவ்வாறு சேகரித்த நிதியை உரிய அலுவலர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நாளை மாலை 5:30 மணிக்கு காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் நடக்க உள்ளது. இதை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார், உடுப்பி ஸ்ரீபேஜாவர் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஷ்ப்சரசன்ன தீர்த்த ஸ்வாமிகள்மற்றும் ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த ஷேத்ர டிரஸ்டின் பொருளாளர் ஸ்ரீ கோவிந்ததேவ்கிரி ஸ்வாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில், நிதி வழங்க விரும்பும் பக்தர்கள், ஸ்ரீமடம் மேலாளர் ஸ்ரீசுந்தரேச அய்யரை அணுகலாம்.