பாதயாத்திரை செல்வோருக்கு தர்மசாஸ்தா பக்தர்கள் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2021 05:01
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழியே, பழநிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு, தர்மசாஸ்தா கோவில் பக்தர்கள் சார்பில், மருத்துவ சேவை வழங்கப்பட்டது.பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா கோவில் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்துக்கு பாத யாத்திரையாக பழநி செல்லும் பக்தர்களுக்கு, சேவை வழங்கப்படுகிறது. இந்தாண்டும், ஆச்சிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் முன் சேவை முகாம் அமைத்து, கோவை ரோட்டில் நடந்து வரும் பக்தர்களுக்கு சேவை செய்யப்பட்டது. முகாமில், பாத யாத்திரையாக வருவோரின் கால்களுக்கு வலி நிவாரணி தடவினர். சுக்கு டீ, மூலிகை குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குள்ளக்காபாளையம் சவுடேஸ்வரி இளைஞர் நலச்சங்கம், சபரிமலை யாத்திரை குழுவினர் இந்தச்சேவையில் பங்கேற்றனர்.