கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோபி: தைப்பூசத்தை முன்னிட்டு, கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சண்முகார்ச்சனை நேற்று கோலாகலமாக நடந்தது. தைப்பூச தேர்த்திருவிழாவில் நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. அதையடுத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, சண்முகருக்கு அபிஷேகம், சிகப்பு சாற்றி அலங்காரம், சண்முகார்ச்சனை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.